‘போராடாத இனமும் ஓடாத மானும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை’ என கர்ஜித்து சிறை சென்ற சீமானை சிறைவாசலில் கண்ணீர் மல்க வரவேற்றிருக்கிறார் இயக்குனர் பாலா.
‘அவன் இவன்’ படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டு, இரண்டு மணி நேரம் சிறை வாசலில் காத்திருந்து, சென்னை வரை வந்து சீமானை விட்டு விட்டுதான் மதுரைக்குச் சென்றார் பாலா.
சீமானை வரவேற்கக் காத்திருந்த இன்னொரு இயக்குனர் ‘மகிழ்ச்சி’ கௌதம்.

