பள்ளிக்கூடத்துக்கு பஸ், ஆட்டோ, வேனில் செல்கிற பிள்ளைகளை விட, நடந்து செல்கிறவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்புகளும், மன அழுத்தம் பாதிக்கிற அபாயமும் குறைவாகவே இருக்கிறதாம். பள்ளிக் குழந்தைகளை இரு பிரிவாகப் பிரித்து லண்டனில் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப் பட்டிருக்கிறது.
ஒரு பிரிவினரை சொகுசாகப் பயணம் செய்யவும், இன்னொரு பிரிவினரை நடந்தும் பள்ளிக்குச் செல்ல வைத்திருக்கிறது. நடந்து சென்ற பிள்ளைகளுக்கு ரத்த ஓட்டமும், இதயத் துடிப்பும் சீராக இருந்ததையும், மன அழுத்தமே இல்லாததையும், அதே சமயம் சொகுசுப் பயணம் செய்த பிள்ளைகளுக்கு இதயத் துடிப்பு அதிகரித்து, மன அழுத்தம் உச்சத்துக்குப் போனதும் கண்டறியப் பட்டுள்ளது.
பெரியவர்களான பிறகு இதயத்தில் உண்டாகிற அடைப்பு, ரத்தக் குழாய்களில் ஏற்படுகிற பாதிப்பு போன்றவற்றைத் தவிர்க்கவும், சிறு வயதிலேயே நடைப் பழக்கத்தைப் பழக்குவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

